பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் …!!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தீர்ப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அதன் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையேயான முக்கியமான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவை கூட்டி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வின் போது ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார். பல ராஜபக்ஷகர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ராஜபக்ச ஒருவரை வேட்பாளராக தெரிவு செய்துள்ளார்கள்.
எதிர்காலத்தில் மக்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறல்ல.என கூறினார்.
சகலரும் ஒன்றிணைந்து அடுத்த வார நடுப்பகுதியில் சிறந்தவொரு வேட்பாளரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.