விளையாடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு ஏற்பட்ட விபரீதம் ….!!!
யாழ் இளைஞன் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த வேளையில் திடீர் என்று மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சக நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது விளையாட்டு மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நரிக்குண்டு பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த இளைஞனின் உடலை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்தியர்கள் இளைஞனை பரிசோதித்து பார்த்த போது இளைஞன் மாரடைப்பு காரணத்தால் உயிழந்தார் என கூறியுள்ளனர்.