ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அறிமுகப்படுத்தும் புதிய தேசிய கொள்கை…!!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச புதிய தேசியக் கொள்கை ஒன்றை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி அதிகாரிகளின் தேசிய சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.விவசாயத் துறைக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், தேசிய கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதாக கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இந்தத் திட்டத்தின் ஊடாக விவசாயிகளை பாதுகாப்பதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ள நிலையில், நாம் விவசாயத்தில் தன்னிறைவு பெற வேண்டும் எனவும், இதன்மூலம் ஏனைய நாடுகளைச் சார்ந்து இருக்க வேண்டிய தேவை ஏற்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதையடுத்து, விவசாய குடும்பங்களின் வருமானத்தை உயர்த்துவது முக்கியமானது எனவும், கோத்தபாய கூறினார். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் ஊடாக, அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் கோத்தபாயதெரிவித்தார்.