அம்பாறை கல்முனையில் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது…!!!
அம்பாறை கல்முனை சாய்ந்த மருது மாவடி பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில் போது 15 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழி நடத்தலில் உப பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த கேரள கஞ்சாவினை மீட்டுள்ளனர்.
இதன் போது மேல் மாடிகளை கொண்ட வீட்டின் இரண்டாம் மாடியில் இருந்து நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவினை பறிமுதல் செய்ததுடன் வீட்டில் குடியிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மைக் காலமாக இந்த பகுதியில் அதிகளவான போதைப் பாவனை மற்றும் போதைப் பொருள் வியாபாரம் என்பன அதிகரித்து காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதையடுத்து மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 30 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். .