ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து பதவி விலகத் தயாராகும் கோத்தபாய…!!!
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சிகளுக்கு இடையில் பல சர்ச்சைகள் உருவாக்கிய நிலையில் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்திருந்தது. அந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் ஜனாதிபதி வேட்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு தேசிய அடையாள அட்டைகள் இரண்டு உள்ளதாகவும், இரண்டு குடியுரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை தொடர்பாக இரகசிய பொலிஸாரினால் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமையை மோசடி செய்து பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என தடை உத்தரவு ஒன்று பெறப்படும் என அவர் கூறியுள்ளார்.
மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் ராஜித சேனாரட்ன இந்த தகவலை வெளியிட்டார்.