நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் பலி…!!!
இலங்கையில் பொகவந்தலாவ கிலானி தோட்டப் பகுதியை சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் நீாில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் 2 நாட்களின் பின்னா் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் பெய்த பலத்த மழையின் காரணமாக காசல் நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக இந்த நபர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.
மேலும் இந்த நிலையில் கடற்படையினரின் தீவிர தேடலின் பின்னர் குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர் .