ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் விதிக்கப்பட்ட தடை..!!!
ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களும் வீதியின் இரண்டு பக்கங்களும் டிஜிட்டல் பெயர் பலகைகளை பயன்படுத்தி பிரச்சார நடவடிக்கை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் இயக்குனர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை அறிவித்துள்ளார்.
அதையடுத்து சினிமா மண்டபங்களுக்குள் தேர்தல் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அது போன்ற பிரச்சார செயற்பாடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு என அவர் கூறியுள்ளார்.