பேஸ்புக் நிறுவனம் இலங்கையர்களுக்கு விடுத்த எச்சரிக்கை…!!!!
இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு தங்கள் பேஸ்புக் கணக்குகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு அரசியல் கருத்துக்களை தங்கள் பேஸ்புக் கணக்குகளில் பகிரும் பாவனையாளர்களின் கணக்குகள் அடையாளம் தெரியாத நபர்களின் கைகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத தரப்பினரால் போலியாக ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக் ஊடாக, பாவனையாளர்களை நுழைய வைத்து அதில் தங்கள் பெயர் மட்டும் கடவுச்சீட்டை பதிவிடுமாறு கோருகின்றனர். அதன் ஊடாக அந்த தரவுகளை திருடிக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ யசிரு குருவிட்டகே மெத்திவ் கூறியுள்ளார்.
குறைந்த பாதுகாப்பு முறையை பயன்படுத்தும் பாவனையாளர்கள் மிக இலகுவாக அடையாளம் தெரியாதவர்களின் கைகளுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உள்ள என அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் two factor authentication என்ற வசதியை பயன்படுத்துமாறும் அல்லது Google authenticator என்றதனை பயன்படுத்துமாறு இலங்கை சமூகவலைத்தள பயனாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.