யாழ் பலாலி விமான நிலையம் எதிவரும் 17ஆம் திகதி திறப்பு…!!!
இலங்கையில் 3ஆவது விமான நிலையமாக யாழ்ப்பாணம் பலாலி விமானம் விளங்குகின்றது. இந்த விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிவரும் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், பிராந்திய விமான சேவைகளை நடத்துவதற்காக, திறந்து வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஓடுபாதையை தரமுயர்த்தும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளது. அதை அடுத்து, சிவில் விமான சேவைகள் நிறுவனம், விமான நிலையத்துக்கான ஏனைய உட்கட்டுமான வசதிகளை ஏற்படுத்தும் பணிகளை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த இரண்டு நிறுவனங்களினாலும் ஆரம்பிக்கப்பட்டு வந்த தரமுயர்த்தல் பணிகள், நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும், முதற்கட்டமாக ஆரம்பமாகும் அனைத்து அடிப்படை கட்டமைப்பு கட்டுமானப் பணிகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.