இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…!!!
இலங்கையின் பெரும்பாலான இடங்களில் இன்று பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனை அடுத்து, சபரகமுவ, மேல், மத்திய, ஊவா, தென், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் இந்த திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.