யாழில் பொலிஸாரால் தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி..!!
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி கெருடாவில் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபர் ஒருவரை பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீபாவளி தினத்தில் சட்டவிரோத மதுபானத்தை தேடிச் சென்ற பொலிசார் ,தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தன்னை காரணமின்றி கைது செய்து, கடுமையான தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த நிலையி குறித்த நபர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை மேலதிக சிகிற்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் கூறுகின்றனர்.