சஜித்தின் புதிய விஞ்ஞாபனம் கண்டியில் வெளியீடு ..!!!
இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேர்தல் விஞ்ஞாபனம் இன்று கண்டியில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னரே மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற சஜித், அவர்களிடம் விஞ்ஞாபனத்தை கையளித்துள்ளார். அதையடுத்து சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாணங்களிற்கான அதிகாரப்பகிர்விற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், பொது சேவையை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் விரைவான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் போன்றவற்ரையும் உறுதிப்படுத்துகிறது. பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களிள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நடந்துள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய சஜித்,புதிய ஜனாதிபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்டவுடன் அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் மறுஆய்வு செய்வேன் என கூறியுள்ளார்.
அதையடுத்து நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் கையெழுத்திடப்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் நான் கட்டுப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எந்தவொரு ஒப்பந்தமும் இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்று அவர் கருதினால், அந்த ஒப்பந்தங்களை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் சஜித் கூறியுள்ளார்.