யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனநாயக்க ..!!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள அவர், தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன் பொது அவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதையடுத்து இன்று காலை யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மகேஸ் சேனநாயக்க பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.