குழந்தை சுஜித் குழிக்குள் மரணித்ததற்கும் உடல் அழுகி போனதற்கும் உண்மையான காரணம் இது தானாம்..! வெளியாகி உள்ள கவலையான விடயம்..!!
கடந்த சில நாட்களாக மக்களால் அதிகம் பேசப் பட்டுக் கொண்டிருக்கும் விடயம் குழந்தை சுஜித்தின் மரணம் தான் . 81 மணி நேரமாக 7 மீட்பு குழுவினர் போராடி காப்பாற்ற முடியாமல் போன குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப் பட்டது. அத்துடன் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பட்ட பகுதி சிதைந்து இருந்ததாகவும், உடல் முழுவதும் மீட்கப் படவில்லை எனவும் கூறப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிவுகளின் படி குழந்தையின் ஒரு கை உடைந்திருந்ததுடன் சில பாகங்கள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், முகத்தில் எந்த ஒரு சிதைவும் இல்லை எனவும் கூறப்பட்டது. ஒரு பக்கம் இந்த தகவல்கள் பொய் என கூறி வருகின்ற போதும் சிலர் இது உண்மை தான் என கூறி வருகின்றனர்.
குழந்தையின் உடல் அழுகி போவதற்கான காரணத்யையும் சில வைத்தியர்கள் தெளிவு படுத்தியுள்ளனர். குழந்தை சுஜித்தின் கிராமம் மலை பிரதேசமாகும். இங்கு வெளியே இருக்கும் குளிர்மை உள்ளே இருக்காது. அதாவது பூமியில் இருந்து மேலே செல்லும் போது வரும் குளிர்மை கீழே செல்லும் போது வெப்பமாகும். குழந்தை 80 அடி ஆழத்தில் சிக்கி இருந்தால் நிச்சயம் அதிக வெப்பம் இருந்திருக்கும்.
இந்த வெப்பத்தை பெரியவர்களால் கூட தாங்க முடியாது. இந்த அதீத வெப்பம் காரணமாக குழந்தையின் உடலில் இருந்து அதிக வியர்வையை வெளியிட்டு இருக்குமாம், குழந்தையின் உடலில் முற்றிலும் நீர் சத்துகுறைந்து இறந்திருக்குமாம் அத்துடன் மேல் இருந்து கொடுக்கப் பட்ட ஆக்சிஜன் சுஜித்தை சென்றடைய துளி அளவும் வாய்ப்புகள் இல்லையாம்.
காரணம் குழந்தை சுஜித்தை இரண்டு அடிக்கு மேல் மண் மூடி இருந்ததாம், குழந்தையின் உடல் அழுகி போவதற்கும் வெப்பம் தான் காரணமாம்.அதிக வெப்பத்தால் குழந்தையின் உடல் சீக்கிரமே அழுகி போக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்..!! குழந்தை இறந்த பின் இது போல் ஏராளமான விடயங்கள் தற்போது வைரலாகி வருகிறது..!!