விவசாயத்துக்கான உரத்தை இலவசமாக வழங்கப்போவதாக ஜனாதிபதி வேட்பாளர்கள் கூறிய கூற்றுக்கு கடும் கண்டனம் தெரிவித்த மைத்திரி…!!!
இலங்கையில் இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள ஜனதிபதி தேர்தலில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்கள் தங்கள் இலங்கை உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக வந்த நாட்டு மக்களுக்கு விவசாயத்துக்கான உரத்தை இலவசமாக வழங்கப் போவதாக தெரிவித்து வருவதை தொடர்ந்து இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மாத்தளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமது கொள்கையின் படி இரசாயன உரம் மற்றும் மருந்துகள் பயன்படுத்துவது சரியான மார்க்கம் இல்லை என ஆவர் கூறியுள்ளார்.
ஆகவே தாம் அதற்கு எதிரானவன். மேலும் இந்த நிலையில் உரத்தை இலவசமாக வழங்குவதன் மூலம் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை மாத்திரமே அதிகரிக்க முடியும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளர். அதேவேளையில் உரத்தை இலவசமாக கொடுப்பதை விடுத்து சிறுநீரகங்களை நாட்டுக்கு கொண்டு வரமுடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.