காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்கள் தொடர்பாக குற்ற புலனாய்வு பிரிவினர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!!
இலங்கையின் தலை நகரான கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போன பல்கலைக்கழ 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குற்ற புலனாய்வு பிரிவினர் கூறியுள்ளனர். மேலும் இந்த 05 தமிழ் மாணவர்கள் திருகோணமலையில் உள்ள கடற்படை வதை முகாமில் வைத்து, துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கடைசி முடிவை தீவிரமாக எடுக்கப்படும் என வைத்திய பகுப்பாய்வு மற்றும் இரசாயன ஆய்வு செயற்பாடுகளை மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கான ஒப்புதலை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க கொடுத்துள்ளார். குற்ற புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் மற்றும் வாக்கு மூலங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாக இருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் உள்ள விசேட உளவுப் பிரிவு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி கூறியுள்ளார்.