பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதிகள்…!!!
இலங்கையின் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளுக்காக மகிழ்ச்சி தரும் வகையில் நுழைவாயில் இருந்து பேருந்து சேவை ஒன்றை உடனடியாக தொடங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். நேற்றைய தினம் மாலை வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கை தொடர்பில் ஆராயும் பயணத்தை நடத்த அமைச்சர் இதனை அறிவித்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஆண்டு தோறும் 6 மில்லியன் பயணிகள் வருகை தருவதற்கான வசதிகள் மாத்திரமே உள்ள போதிலும் தற்போது 12 மில்லியன் வரையான பயணிகளாக அதிகரித்துள்ளனர்.
அதற்கு பொருத்தமான அபிவிருத்திகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட போதிலும் அந்த செயற்பாடுகள் தடைப்பட்டது. இருப்பினும் இந்த அபிவிருத்தி செயற்பாடுகளை மீண்டும் தொடங்கப்படும் அதற்கு அமையவே இந்த பேருந்து சேவையும் தொடங்கப்படடவுள்ளதாக அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.