மழை நீரில் மூழ்கிய மட்டக்களப்பு..!!!
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம் தொடந்து பெய்துவரும் கடும் மழையினால் தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. வாகரை, வாழைச்சேனை, ஓட்டமாவடி, கிரான் ஆகிய பிரதேசத்திலுள்ள பல வீதிகள் நீர் நிரம்பியுள்ளது. அதையடுத்து சிலரது குடியிருப்பு காணிக்குள் நீர் காணப்படுவதால் மக்கள் பல பிரச்சினைகள் எதிர்நோக்கி வருகின்றனர்.
மட்டக்களப்பில் சில தினங்களாக அங்கு பலத்த மழை பெய்து வருகின்ற நிலையில் தாழ் நிலங்கள் நீரில் முழ்கியுள்ளதோடு, விவசாய நிலங்கள் மக்கள் குடியிருப்பு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடரும் பலத்த மழை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் காலநிலை மாற்றம் காரணமாக மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து மீனவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு காணப்படுவதுடன், அன்றாட தொழிலுக்கு செல்லும் கூலித் தொழிலாளர்களும் தொழிலுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்க வேண்டிய நிலைக்கு ஏற்ப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் பல இடங்களில் சாலைகளிலும் உள்ள நீர் செல்வதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மழை காலத்தில் வெள்ள நீர் சாலைகளில் மக்களின் குடியிருப்புக்களிலும் செல்லும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து அங்கு இருக்கும் குளங்களில் வான் கதவுகள் திறக்கும் பட்சத்தில் பல தாழ்நில கிராமங்கள் நீரில் மூழ்கும் நிலை உருவாகக் கூடும் எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அனர்த்தக் குழு தயார் நிலையில் செயற்பட்டு அனர்த்தத்தை கட்டுப்படுத்த தீவிர செயற்பாடுகளை நடந்த வருகின்றனர். அதோடு , படகுச்சேவை, அனர்த்த நிவாரண சேவை, பாதுகாப்பு பிரிவு, பொதுமக்கள் மற்றும் முப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நிலையத் தகவல்கள் கூறுகின்றன.