பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய நித்தியானந்தா சிஷ்யை, இவர் தான் கவிஞர் வைரமுத்து அவர்களை தகாத வார்த்தையில் திட்டியவர்!!
கடந்த சில நாட்களாக நித்தியானந்தா மீது புகார்கள் குவிந்து வருகிறது..பலர் தங்கள் புகார்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நித்தியானந்தாவின் சிஷ்ஷைகள் இருவர் தங்கள் தந்தைக்கு எதிராக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர். பல வருடங்களாக நித்தியானந்தாவின் தனிச்செயலராக இருந்தவர் ஜனார்த்தனன் சர்மா..!
இவர் குறித்த பணியில் இருந்து விலகியதுடன் நித்தியானந்தா மீது பரபரப்பு புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் எனக்கு நான்கு பெண் பிள்ளைகள் அதில் 2வது மற்றும் 3வது மகள்களை நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்தேன். குஜராத்தில் நித்தியானந்தாவின் சிஷ்ஷைகளாக இருக்கும் இவர்களுக்கு மோசமான பாலியல் தொல்லைகள் இடம்பெறுகிறது..
அதனால் தான் பணியில் இருந்தும் விலகினேன் ஆனால் என் என் பிள்ளைகள் இருவரும் நித்தியானந்தாவிற்கு பயந்து உண்மையை கூற மறுக்கிறார்கள்..இவர்கள் தொடர்பான ரகசியங்கள் நித்தியானந்தாவிடம் இருக்கும் என நினைக்கிறேன், தயவு செய்து என் மகளை மீட்க உதவுங்கள் என டிவி நிகழ்ச்சியில் பேட்டியளித்தனர். இதனை தொடர்ந்து ஜனார்த்தனன் அவர்களின் மகள்கள் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதில் எங்களுக்கு எந்த தொல்லையும் இல்லை, அப்பா நித்தியானந்தா தனிச்செயலராக இருக்கும் போது பண மோசடி செய்துவிட்டார்.. இதனை மறைக்க என்னை நித்தியானந்தா பற்றி தவறாக பேச கூறினார்.. நாம் மறுத்ததால் தற்போது தவறான விடயங்களை கூறுகின்றார். நித்தியானந்தா அவர்கள் எங்களுக்கு ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.
அப்பாவுடன் இணைந்து என் அக்கா நித்திய தத்துவ பிரியாவும் நித்தியானந்தாவிற்கு எதிராக பொய் கூறுகின்றார் என வீடியோவில் தெரிவித்துள்ளார். வீடியோவில் தோன்றும் இந்த பெண் தான் கவியரசு வைரமுத்து அவர்களுக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியவர் என்பது குறிப்பிட தக்கது..!!