இன்று தொண்டைமானாறு வான் கதவுகள் திறப்பு..!!!
இலங்கையின் புனித பூமியான யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து பெய்து வந்த பலத்த மழை காரணமாக, தொண்டைமானாறு கடல்நீரேரியின் வான் கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி மற்றும் இடைக்காட்டு பகுதியின் ஊடக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம் பாயலாம் எனும் அபாயத்தால் இந்த வான் கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளது.
வான் கதவை யாழ்.மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சர்வராஜா போன்ற குழுவினர் திறந்துவைத்தனர். அதையடுத்து தொண்டைமானாறு கடற்பகுதியில் வெள்ளம் பெருக்கு எடுப்பதால் முனைபிரதேசம், தொண்டைமானாறு அக்கறைபிரதேச மக்களால் கால்வாயாக வெட்டிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.