ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை பாராட்டிய கோத்தபாய ராஜபக்ச..!!!!
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு பாராட்டு கூறியுள்ளார். சிறந்த முறையில் விருந்தோம்பலை முன்னெடுத்தமையினால் கோத்தபாய ராஜபக்ச மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அந்த பதிவில்,
இலங்கையின் முறைபடி வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்க்கு நன்றிகள். இலங்கையின் கொடியை ஏந்திச் செல்லும் நமது தேசிய அடையாளமானது நம் நாட்டை மீண்டும் பெருமைப்படுத்தி பெயர் வாங்க செய்யும் என நம்புகின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபராக பதவி பிரமாணம் செய்த பின்னர் கோத்தபாய ராஜபக்ச தனது முதலாவது பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொண்டு நேற்று இரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.