சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சஜித்…!!!
இலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில், கொழும்பின் புறநகர் பகுதிகளிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது போன்ற நிலையில் வெள்ளநீர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நேரில் சென்று சந்தித்த நிலையில் அவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து குடிமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.