இலங்கைக்கான சுவிஸ் தூதரக பெண் பணியாளருக்கு நீதிமன்றம் விதித்த வெளிநாட்டு பயணத்தடை…!!!!
இலங்கைக்கான சுவிஸ் தூதரக பெண் பணியாளருக்கு நீதிமன்றம் விதித்திருந்த பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகத்தில் பணிபுரிந்து வரும் உள்நாட்டு பெண் பணியாளர் ஒருவர் கொழும்பில் வைத்து வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இந்த பெண் பணியாளரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பல மணித்தியாலங்கள் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.
மேலும் இந்த நிலையில் இந்த பெண் பணியாளர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வது தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் இந்த பெண் பணியாளர் தொடர்பில் உடல் மற்றும் உள ரீதியான மருத்துவ பரிசோதனைகள் நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.