கிறிஸ்மஸ் கேக்கிற்குள் 4 கிராம் ஹெரோயின் பக்கெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது..!!
கல்பிட்டியில் கிறிஸ்மஸ் கேக்கிற்குள் வினோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய மீனவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 4கிராம் ஹெரோயினின் பெறுமதி 75000 ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி கடலில் படகு மூலம் சென்று இளைஞன் ஒருவருக்கு சந்தேக நபர் இந்த கேக்கை வழங்கியுள்ளார். கேக் பெற்றுக் கொள்ள வந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனை கைது செய்ததுடன் கேக்கை தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். இந்த கேக்கை சோதனை செய்த போது அதற்கு மறைக்கப்பட்ட நிலையில் 19 பக்கட் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.