மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி..!!
இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச திடீரென மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அதன் போது அங்கு மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கோத்தபாய ராஜபக்ச மக்களிடம் நேரில் கேட்டு அறிந்துகொண்டார். மக்கள் சேவயை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஜனாதிபதி இதன் போது அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மக்கள் இந்த இடத்திற்கு வருகை தந்து பல சிரமங்களுக்கு முகம் கொடுப்பதாக ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர். மக்களின் தேவைகளை புரிந்துக்கொண்டு அவற்றை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அவற்றை புரிந்துகொண்ட ஜனாதிபதி, அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார். அரச சேவை என்பது மக்களின் சேவை என்றும், தனது ஆட்சியில் அரச சேவை மந்த கதியில் இயங்க முடியாது என்றும் ஜனாதிபதி கூறினார் .