இன்று மாலை 6 .00 முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6.00 வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம்!!
ஸ்ரீலங்கா முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதற்கு அமைய இன்றைய தினம் மாலை 6.00 தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6.00 வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இன்றைய தினம் காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.