ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு இன்று..!
இலங்கையில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் உயர்மட்ட கூட்டம் ஒன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்தவுள்ளார். இந்த கூட்டம் இன்று அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசியக்கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இழுத்தடித்து வருவதால் கட்சி தொடர்பாக பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளதாக மூத்த பிரமுகர்கள் கூறியதை அடுத்து இந்த பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கூறி 42 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதத்தை இந்த கூட்டத்தில் வைத்து பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என ஐ.தே.கவின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.