ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் விசேட போக்குவரத்து முறையை முன்னெடுக்க பொலிஸ் தீர்மானம்…!!!
நாட்டில் அமுல்படுத்திய ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் விசேட போக்குவரத்து முறையை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். அதன்படி, உணவு விநியோகம் மற்றும் பொருளாதார நிலையங்களுக்கான அத்தியாவசியப் பொருள் விநியோகம் போன்றவற்றை மேற்கொள்ள விசேட போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.