எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் அறிவிப்பு..!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லையை நீடித்துள்ளது. இலங்கையில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்களை வீட்டிலேயே முடங்கி இருக்குமாறும் வீட்டிலிருந்து பணி புரியுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இது போன்ற நிலையில் இலங்கை அரசாங்கத்தால் முன்னரே அறிவிக்கப்பட்ட வீட்டிலிருந்து பணி புரியும் கால எல்லையை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்காவில் தற்போதுவரை 210 கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.