இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரிப்பு..!!
ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 4 பேரும் கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என கூறப்படுகின்றது. இந்நிலையில், ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 237 ஆக அதிகரித்துள்ளது.
ஸ்ரீலங்காவில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 63 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.