சுகாதாரப் பிரிவு மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை…!!!
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருவோருக்கு மலேரியா நோய் பரவுவதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் மக்களிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே போல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் போது மலேரியா தடுப்பு தொடர்பாக செயற்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். கடந்த வாரத்தில் மாத்திரம் மலேரியா நோயாளர்கள் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் இதுவரைக்கும் 28 மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் உள்ளதாக மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.