திருகோணமலையில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..!
திருகோணமலை – அக்போபுர பகுதியில் இரு குழுவினருக்கிடையில் நடைபெற்ற மோதல் காரணமாக நான்கு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும் இச் சம்பவம் அதிகாலை நடைபெற்றதாகவும் இது தொடர்பில் அக்போபுர, கித்துல்ஊற்று, தல்கஸ்வெவ போன்ற பகுதிகளை சேர்ந்த 19, 20 மற்றும் 23 வயதுடையவர்களையே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அக்போபுர பகுதியில் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த வேளையில் குழுவொன்று அவரை தாக்கிய நிலையில் இந்த சம்பவம் இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக மாறியது.
இது தொடர்பாக குற்றவாளிகளிடம் விசாரணையை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.