வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இலங்கை அரசின் அவசர செய்தி..!
கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலை சீனாவை தொடர்ந்து இலங்கையிலும் ஆரம்பித்துள்ளது. சீனா வுஹான் நகரத்தில் தொடங்கிய கொரொனா வைரஸ் உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வருகிறது. இதில் சில நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு மீண்டு விட்டதாக அறிவித்தது, அந்த நாடுகளின் வரிசையில் இலங்கையும் சேர்ந்தது.
இலங்கையில் முழுமையாக கொரோனா வைரஸ் கட்டுப் படுத்தப் பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அறிவித்து சில மாதங்களில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் சுமார் 593 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப் பாட்டுக்குள் வந்த போது வெளி நாட்டில் இருந்து சொந்த நாட்டிற்கு வந்தனர். இவர்களுக்காக விமானங்கள் பறந்தது.
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் நபர்களிடம் இருந்து தான் கொரோனா தொற்று உருவாகிறது என்பதால் இனி மறு அறிவித்தல் வரும் வரை வெளி நாடு வாழ் இளைஞர்கள் நாட்டிற்கு வர தடை அதாவது விமான சேவைகள் தற்போது தடை விதிக்கப் பட்டுள்ளது..!!