இலங்கை பதுளை, பசறை பகுதியில் சற்று முன்னர் 14 பேர் பலி, 31 பேர் படுகாயம். புகைப்படங்கள் இணைப்பு.!!
சற்று முன்னர் பதுளையில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் மரணமடைந்ததுடன் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று பொலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் லுணுகல பிரதேசத்தில் இருந்து இன்று காலை கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பதுளை பசறை 13ம் மைல் கல் பகுதியில் வைத்து 200 அடி பள்ளத்தில் விழுந்தே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியின் வீதி வளைவுகள் ஆபத்தானது என அறிவிக்கப் பட்டிருந்த போதும் சாரதிகளின் அதிவேகமே விபத்துகளுக்கு காரணமாக அமைந்துள்ளது, அதிக வேகமாக பயணித்த பேரூந்து சாரதியால் வளைவில் வேகத்தை கட்டுப் படுத்த முடியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது.
எது எப்படி என்றாலும் விபத்தில் மரணமானவர்களில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பொலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்ததுடன் விசாரணை முன்னெடுக்கப் பட்டு வருவதாக கூறப்படுகின்றது.!!