குழந்தை சுஜித் உயிருடன் இருக்கிறானா இல்லையா.!? உண்மை நிலவரம் இது தான்..!!
திருச்சி குழந்தை சுஜித் பற்றிய எதிர்பார்ப்புகள் முற்றிலும் குறைந்துவிட்டது. காரணம் இனி குழந்தை உயிர் தப்புவதற்கு 1% வாய்ப்புகள் கூட் இல்லை. வெறும் கை மட்டுமே இது வரை தெரிந்து வந்த நிலையில் நேற்றிரவு குழிதோண்டும் அதிர்வினால் தற்போது 85 அடி வரை குழந்தை சென்றுவிட்டது. ஏற்கனவே இரண்டாவது ரிக் இயந்திரம் குழி தோண்டிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 50 அடி கூட தோண்டப் படவில்லை.
குழந்தை 85 அடியில் இருந்தால் 90 மேற்பட்ட அடி குழி தோண்ட வேண்டும். அது மட்டும் இன்றி கீழே சென்று சுரங்கம் தோண்ட வேண்டும். கீழே சுரங்கம் தோண்டும் போது கல் பாறைகள் இருந்தால் அது இன்னும் கடினமாகும். குழி தோண்டவே இன்னும் 5 மணி நேரங்கள் தேவைபடுகிறது என மீட்பு குழுவினர் கூறி வருகின்ற நிலையில்
சுரங்கம் தோண்டும் வழியில் பாறை இருந்தால் அதற்கும் சில மணி நேரங்கள் தேவை படுகிறது. ஆக குறைந்தது 8 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த நிலையில் குழந்தையை உயிரோடு மீட்பது முடியாத விடயமாகும். அம்மா காப்பாற்றுவேன் என்றார் காப்பாற்றுவாள் என ஏங்கிக் கொண்டிருந்த குழந்தை தனது மரணம் வரை நம்பிக்கையோடு இருந்திருக்கும். விதி யாரையும் விட்டு வைப்பதில்லை.
சுர்ஜித் மட்டும் விதிவிலக்கா என்ன? குழந்தை நேற்றே உயிருடன் இல்லை என கூறிய போதும் மனம் ஏற்கவில்லை. இறுதி நொடியில் ஏதும் நடக்கலாம் என்று மனம் பதபதைத்தது. இனி விஞ்ஞான ரீதியாக இருந்த நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது. சுர்ஜித்தின் தாய் கலாமேரி என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்கிறார்.ஒட்டுமொத்த உலக மக்களும் குழந்தைக்காக காத்திருக்கின்றனர்.
மீட்பு பணிகளும் நடை பெறுகின்றன. ஆனால் சுஜித்.? நிம்மதியாக உறங்கிக்கொண்டிருபான். ! தற்போது கிடைத்த தகவலின் படி ரிக் இயந்திரம் மிகவும் மெதுவாக செயற்படுவதால் பாறைகளை உடைக்க சென்னையில் இருந்து விஷேட ரில் இயந்திரம் கொண்டுவரப் படுவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.