உயிருக்கு போராடும் சுவாதி..! நேரில் சென்று பார்த்து கண்ணீர் விட்டு அழுத நிர்பயாவின் பெற்றோர்..! என்று தீரும் இந்தியாவின் கற்பழிப்புக் கொலைகள்..!?
இந்தியாவில் தொடரும் பாலியல் கொடூரங்களுக்கு நீதி கிடைக்காத நிலையில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 6 மாதத்திற்குள் தண்டனை கொடுக்க வேண்டும், எந்த ஒரு காரணத்திற்காகவும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை விடுதலை செய்யக் கூடாது,
கைது செய்யப் பட்டு பல வருடங்களாக சிறையில் வைத்து பாதுகாக்கப் படும் குற்றவாளிகள் தண்டிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து டெல்லியில் மகளீர் சங்கத் தலைவி சுவாதி மலிவால் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறார்.
அண்மையில் எரித்துக் கொள்ளப் பட்ட இளம் பெண் உன்னாவ், அதே போல் சென்று கொண்டிருந்த பேரூந்தில் வைத்து 5 மிருகங்களால் கற்பழித்து கொள்ளப் பட்ட நிர்பயா, இவர்களுக்கு உடனடியாக நீதி வேண்டும்.. என 11 நாளாக இந்த போராட்டம் தொடர்கிறது. தற்போது சுவாதியின் உடல் நிலை மோசமடைய தொடங்கியுள்ளது.. ஆனால் இன்னும் அரசு கண்டுகொள்வதாக தெரியவில்லை…
சுவாதிக்கு உலகம் முழுவதும் இருந்து ஆதரவுகள் குவிந்து வரும் நிலையில் நிர்பயாவின் பெற்றோர் சுவாதியை சென்று சந்தித்துள்ளதுடன் உண்ணாவிரதத்தை கைவிடும் படி கூறியுள்ளனர். உயிரோடு விளையாடாதே என கண்ணீர் மல்க கூறிய போது இல்லை உங்கள் மகள் உட்பட அனைத்து பெண்களுக்கும் நீதி வேண்டும்.
அது என் மரணத்தில் தான் கிடைக்கும் என்றால் நிச்சயம் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன் என கூறியுள்ள நிலையில் நிர்பயாவின் பெற்றோர் கண்ணீர் விட்டு அழுத காட்சி வைரலாகி வருகிறது..!!
#Nirbhaya's parents visit #Rajghat to meet @SwatiJaiHind on the 11th day of her hunger strike.
They got emotional and appealed her to end her hunger strike. pic.twitter.com/EL87k6K7Lm
— Amit Mishra (@Amitjanhit) December 13, 2019