டாக்சி ட்ரைவரை குற்றாலம் அழைத்துச் சென்று பெண் செய்த செயல்..!! புகைப்படம் வெளியிட்ட பொலீசார்..!!
டாக்சி ட்ரைவர் ஒருவருவரை அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பாக பொலீஸார் பெண் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். சென்னையில் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தவர் நாகநாதன். நேர்மையான அதே போல் நேரம் தவறாத நாகநாதன் மீது டாக்சி கம்பனி ஓனருக்கு அதிக நம்பிக்கை இருந்துள்ளது.
கடந்த 8ம் திகதி தனது முதலாளிக்கு அழைப்பினை ஏற்படுத்திய நாகநாதன் நான் நாளை சென்னை திரும்பி விடுவேன் தற்போது சிலரை குற்றாலம் அழைத்துச் செல்கிறேன் என கூறியுள்ளார். அதன் பின் நாகநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை, மொபைல் சுவிட்ச் ஓப் செய்யப் பட்டிருந்தது.
இதனை நாகநாதனின் முதலாளி பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸ் விசாரணையில் அழுகிய நிலையில் நாகநாதனின் உடல் கண்டிபிடிக்கப் பட்டுள்ளது. சிசிடிவி மற்றும் டாக்ஸி ட்ரைவர்கள் கொடுத்த தகவலின் படி குழு ஒன்று குற்றாலம் செல்ல இவரது காரை வாடக்கு எடுத்து சென்றுள்ளனர்,
இதில் இளம் பெண் ஒருவர் ஈடுபட்டிருப்பதாகவும் சிசிடிவி காட்சிகளின் பின் அவர் trichiயை சேர்ந்த ஜெயசுதா என்பது தெரியவந்துள்ளது. நாகநாதனின் கடத்தல் கொலையில் ஜெயசுதா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இவரை கண்டுபிடிக்க உதவுமாறு மக்களிடம் உதவி கோரியுள்ளனர்..