இந்தியாவில் ஆசிரியர் தேர்வில் முதலிடம் பெற்ற நபர்..! ஜனாதிபதி யார் என்பது கூட தெரியாத அவலம்..!! என்னவாகப் போகிறது மாணவர்களின் எதிர்காலம்..!!
ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்து ஆசிரியர் நியமனம் பெற்ற நபருக்கு நாட்டின் ஜனாதிபதி யார் என்பது கூட தெரியவில்லை என உத்திர பிரதேச பொலீஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் உத்திர பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்காக 69 ஆசிரியர்கள் தேவைப்பட்ட நிலையில் இவர்களுக்கான தேர்வு இடம்பெற்றது.
இந்த தேர்வை 500க்கு மேற்பட்டவர்கள் எழுதிய நிலையில் 69 பேர் தேர்வு செய்யப் பட்டனர். ஆனால் இந்த தேர்வு முறையாக நடத்தப் படவில்லை, இதற்காக பல லட்சம் ரூபாய்கள் லஞ்சமாக பெறப்பட்டதுடன் தேர்வு தகுதி அற்றவர்களுக்கு நியமனம் கொடுக்கப் பட்டுள்ளதாக பாதிக்கப் பட்டவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை அடுத்து உடனடியாக நடைமுறைக்கு வரும்படி பணி நியமனத்தை ரத்து செய்தது உயர் நீதி மன்றம். இருபினும் இதனை எதிர்த்து மாநில அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் இது பற்றி விசாரித்து வரும் உத்திர பிரதேச பொலீஸார் கூறுகையில் ஆசியர் தேர்வில் முதலிடம் பிடித்த தர்மேந்திர படேல் என்பவரை விசாரித்த போது அதிர்ந்து போனோம்,
அவருக்கு சாதாரண பொது அறிவு கூட இல்லை. இந்தியாவின் ஜனாதிபதி யார் என்பது கூட அவருக்கு தெரியாது என தெரிவித்துள்ளதுடன், இந்த தேர்வு முறைக்கேடு தொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளோம், பணம் மட்டுமே இங்கு ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்..!!