இலங்கையில் உள்ள “தேசிய தெளஹீத் ஜமாத்” தீவிரவாதிகளுக்கு ஜம் இய்யத்துல் உலமா சபையின் அவசர கோரிக்கை..!
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் இன்றளவும் ஏதேனும் ஒரு பிரச்சனை நடந்துகொண்டே இருகின்றது. தீவிரவாதிகளின் இடங்களில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பொலீஸார் கைப்பற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள “தேசிய தெளஹீத் ஜமாத்” அமைப்பின் தீவிரவாதிகளுக்கு இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “தேசிய தெளஹீத் ஜமாத் தீவிரவாதத்தை சேர்ந்தவர்கள் இருந்தால் தயவு செய்து உங்கள் ஆயுதங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்துவிட்டு சரணடைந்து விடுங்கள்.
சஹ்ரானின் பிரச்சார வீடியோக்கள் புகைப்படங்கள் என அனைத்தையும் பொலீஸாரிடம் ஒப்படைத்து சரணடைந்து மற்றைய முஸ்லீம் மக்களை வாழ விடுங்கள் என தீவிர வாதிகள் அனைவரிடமும் இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சமை கேட்டுக் கொண்டுள்ளது.
நாளைய தினம் இலங்கையில் முஸ்லீகளின் புனித நோன்பு காலம் ஆரம்பமாகிறது இதனை நிம்மதியாக முஸ்லீம் மக்கள் கடைபிடிக்க நிச்சயம் தீவிரவாதிகள் சரணடைய வேண்டும் என உலமா சபையின் ஊடக செயலாலர் பாசிலி பாரூக் தெரிவித்துள்ளார்.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!