இலங்கை தீவிர வாத தாக்குதலின் தலைவன் சஹ்ரான் ஹசீம் இல்லை..! அரசின் அறிவிப்பால் மீண்டும் பரபரப்பு..! தீவிர வாத தலைவன் கைதாகியுள்ளான்..!
இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கு தலைவனாக செயற்பட்டவர் தெளஹீத் ஜமாத் தலைவர் சஹ்ரான் ஹசீம் என இதுவரையில் அரசு தெரிவித்தது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தாக்குதலுக்கு சஹ்ரான் தலைவன் இல்லை என்றும் அவன் அவனது நண்பர்களும் தீவிரவாதிகள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பேசியுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிர வாத தலைவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். சஹ்ரான், இல்ஹாம், இன்ஹாம், லதீப், அசார், மற்றும் தீவிர வாத தாக்குதல் நடத்திய அனைவரும் குறித்த தலைவனின் கட்டளையின் படி நடந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் ஹசீம் தலைவனாக இருந்திருந்தால் நிச்சயம் தற்கொலை குண்டுதாரியாக சென்றிருக்க மாட்டான் என்ற சந்தேகம் இருந்ததாகவும் தற்போது அந்த சந்தேகம் தீர்ந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் கைது செய்யப் பட்ட தீவிர வாத தலைவனின் பெயரோ விபரங்களோ இன்னும் வெளியாகவில்லை.
தாக்குதல் நடத்திய தீவிர வாதிகள் அனைவரும் இறந்துவிட்டதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்க தலைவனை கைது செய்திருப்பதாக அரசு கூறி இருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!