“வீட்டை விட்டு என் குடும்பத்தினாரால் வெளியே செல்ல முடியவில்லை” இலங்கை வன்முறை பற்றி தஸ்னிம் நசீர்..!
கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பின் நாட்டில் ஏராளமான மாற்றங்கள் இடம்பெற்று வருகிறது. மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவித்து வரும் நிலையில் நாட்டில் பல இடங்களில் முஸ்லீகளுக்கு எதிரான வன்முறைகள் வெடித்தது.
உயிர் இழப்புகள் உடமை இழப்புகளும் நிகழ்ந்தது. இது பற்றி பலரும் தங்கள் கருத்துகளை கூறிவரும் நிலையில் இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் வசிக்கும் தஸ்னிம் நசீர் என்ற பெண் பத்திரிகையாளர் தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதில் ஈஸ்டர் தின தாக்குதலில் உயிர் இழந்த உறவுகளுக்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிறந்தது இலங்கையில் தான். என் கணவர் கூட இலங்கையில் பிறந்தவர் தான். இலங்கை ஒற்றுமையான நாடு அதில் எப்படி இப்படி ஒரு பிரிவினை வந்தது என்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
ஒவ்வொரு வருடமும் விடுமுறைக்கு நான் இலங்கை சென்று வருவேன் அங்குள்ள மக்கள் அன்பானவர்கள். 21ம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின் சிலர் மாறியுள்ளதாக உணர முடிகிறது. முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறையின் போது எனது குடும்பம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருந்ததாம். இனியும் இது தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.!