அதீத திறமையுள்ள இந்த ஈழத்து இளைஞனுக்கு வெளிநாட்டுத் தமிழர்கள் உதவுவார்களா?
ஈழம் – பல அதீத திறமைசாலிகள், வித்துவான்கள் எனப் பலர் இங்கே இருந்தாலும், நம்மில் பலர் நம்மவர்களின் திறமைகளை கண்டுகொள்வதும் இல்லை கை கொடுப்பதும் இல்லை, இதனால் திறமைக்கான இடம் கிடைக்காமல் போகிறது. அப்படி தனக்கான இடத்தை தேடி தேடி அலைந்த துவாரகன் பற்றித் தான் பார்க்கப் போகின்றோம்.
1995ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவருக்கு இசை என்றால் உயிர் என்றே சொல்லலாம். இவர் யாழ் யுனிவெர்சிட்டியில் வணிகப் பீடத்தில் படித்ததோடு, “வானவில் இசைக் குழு” எனும் இசைக் குழுவை நடத்திவருகிறார். வெறும் 24 வயதேயான துவாரகன் தனது தனித்திறமையை சகோதர மொழி தொலைகாட்சி ஒன்றில் நிரூபித்த காணொலியை இங்கே இணைத்துள்ளோம்.
இத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற துவாரகன் நடுவர்களின் பாராட்டையும் பெற்றார். ஆனால் சகோதர மொழி தொலைக்காட்சி கொடுத்த வாய்ப்பை கூட நம் நாட்டில் உள்ள எந்த ஒரு தமிழ் ஊடகமும் கொடுக்கவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் முறைப்படி இசையை நேசித்தவருக்கு அங்கீகாரம் கிடைத்தாலும், அவருக்குரிய வாய்புக்கள் இன்று வரை சரியாக கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
2018ம் ஆண்டு தொலைகாட்சியில் கலக்கிய துவாரகன் 2019ம் ஆம் ஆண்டு யார் என்று மக்களுக்கு தெரியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். ஒரு இசைக் கருவியில் எத்தனை மாஜா ஜால இசை வித்தை செய்ய முடியும் என்பதை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் நிரூபித்த இளைஞன் இன்று காணாமல் போனதிற்கான காரணம் நாம் தான். நம்மவரை வாழ வைக்க விருப்பப் படாத நாம் அவர்களை பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்வதற்காக எதையும் செய்வதில்லை. துவாரகனின் திறைமை பிடித்தால் நம் நாட்டு கலைஞன் சிறப்பாக செயற்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் இதனை பகிருங்கள்..!!
நீங்கள் வாழும் ஏதாவது ஓர் புலம் பெயர் நாட்டில் இவ் இளைஞனையும் அழைத்து, அவனது திறமைக்கு களம் அமைத்து கொடுக்க முடியுமானால் தயவு கூர்ந்து தாமதிக்காது இதனைச் செய்யுங்கள். வாழ்த்துகள் துவாரகன்!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.