முஸ்லீம் அமைச்சர்களை வெளியே அனுப்ப இருந்த உண்ணாவிரத போராட்டம் தவறானது….! அதிரடியாய் மாறிய தேரர்..! இது ஆச்சர்யம் தான். !
ஏப்ரல் 21ம் திகதி இடம் பெற்ற தற்கொலை தாக்குதலின் பின் இலங்கையில் மக்களின் நிம்மதி முற்றிலும் சிதைந்து போனது. குறிப்பாக முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரம் உட்பட அன்றாடம் கடமைகள் அனைத்துமே பாதிக்கப் பட்டது.
தற்கொலை தாக்குதலின் பின் நீர்கொழும்பு, கம்பஹா, சிலாபம், புத்தளம், குருனாகலை, போன்ற இடங்களில் முஸ்லீம் மக்களின் கடைகள், வாகனங்கள், வீடுகள், பள்ளிகள், என அனைத்தும் அடித்து நொறுக்கப் பட்டதுடன் உயிர் சேதங்களும் ஏற்படுத்தப் பட்டது.
இதனை தொடர்ந்து முஸ்லீம் அமைச்சர் உட்பட ஆளுநர்கள் இருவரை கைது செய்யும் படி போராட்டம் வெடித்ததது இதன் உச்சக் கட்டமாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி விலக்க் வேண்டும் என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
இதனால் அரசு ஆட்டம் காண நல்லிணக்க அரசாங்கத்தில் இருந்த ஒட்டு மொத்த முஸ்லீம் அமைச்சர்களும் பதவி விலகினார்கள். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட தேரருக்கு ஆதரவாக கலத்தில் இறங்கியவர் இலங்கையின் சர்ச்சைக்குரிய தேரரான ஞானசார தேரர்.
கண்டியில் இருந்து கொழும்பு வரை போராட்டத்தில் கூட கலந்துகொண்டார். ஆனால் திடீர் என அப்பிடியே கதையை மாத்தி பேசியுள்ளார். அதாவது அத்துரலிய தேரர் முட்டாள் போராட்டம் செய்ததாகவும் முஸ்லீம் அமைச்சர்களின் பலத்தை அதிகப் படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
முஸ்லீம்களை வழக்கமாக விரட்ட வேண்டும் என்று மட்டுமே கூறும் இவரது வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது அதிசயம். இதோ வீடியோவை பாருங்கள் எப்படி பல்டி அடிக்கிறார்..!