16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நுண்கடன் நிதி நிறுவனத்தின் முகாமையாளர்..!!!
மட்டக்களப்பில் களுவாங்கேணி பகுதியில் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த வருடம் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் இயங்கி வரும் நுண்கடன் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுமியை அந்த நிறுவனத்தின் முகாமையாளர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.
சிறுமியும் குழந்தையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி வழங்கிய வாக்கு மூலத்திற்கு அமைவாக நிதிநிறுவனத்தின் முகாமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை அடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.