கொரோனா வைரஸிற்கான புதிய மற்றும் பழைய அறிகுறிகள் இவை தான்..! அதிகம் பகிருங்கள்..!!
கொரோனா வைரஸினால் மரணமடந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்தை நோக்கி நகர தொடங்கி விட்டது. பல நாடுகளில் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைய தொடர்ங்கியுள்ள போதும் சில நாடுகளில் அதிககரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது கொரோனா வைரஸின் புதிய சில அறிகுறிகளும் அடையாளம் காணப் பட்டுள்ளது.
அதாவது நீங்கள் கொரோனா நோயாளிகளுடன் பழகவோ, உறவாடவோ தேவை இல்லை, அவர்கள் நடந்து சென்ற பாதைகள் , அவர்கள் பயன்படுத்திய எதையாவது தொட்டால் கூட போதுமானது உங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து ஏற்பட்டுவிடும். அது பற்றி தற்போது பார்க்கலாம். குளிர் காய்ச்சல், திடீரென உடல் நடுக்கத்துடன் காய்ச்சல் வந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.
இது சாதாரண காய்ச்சல் என்று நினைக்க வேண்டாம். உடல் நடுக்கம் குளிர் காய்ச்சல் மட்டும் கூட கொரோனா வைரஸின் அறிகுறிகளில் ஒன்றாகி உள்ளது. அடுத்தது கை, கால் வலி, உடலை உடைத்தது போன்ற வலி, தலை வலி உயிர் போவது போல் இருப்பது, இப்படி இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கால், கை அல்லது உடலில் கொப்பளங்கள், அல்லது புதிதாக தோல் நோய்கள், அழற்சிகள், ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யுங்கள், காரணமின்றி சளி, இருமல், வாசமின்மை, சுவையின்மை, போன்றவை ஏற்பட்டால் உடனடியாக கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இவை அனைத்து கொரோனா வைரஸிற்கான பழய புதிய அறிகுறிகளாகும்.!