அழையா விருந்தாளியாக, கொரானா கதவை தட்டும் ஆபத்து அதிகம் உள்ளதால் உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்த உலக சுதாகார அமைப்பு..!!
சீனாவில் உருவெடுத்து கோர தாண்டவமாடும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் குறி வைத்துள்ளது. அந்த வகையில் உலக நாடுகள் அனைத்தும் கொடிய கொரானா வைரஸ் தொடர்பாக மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என உலக சுதாகார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் வூகான் நகரில் தீவிரமாக பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அமெரிக்கா உட்பட 28 நாடுகளுக்கு வேகமாக பரவிய நிலையில், குறிப்பாக தற்போது தென்கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூரில் உள்ளிட்ட நாடுகளில் தனது வேகத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அழையா விருந்தாளியாக, கொரானா கதவை தட்டும் ஆபத்து அதிகம் உள்ளதால்,உலக நாடுகள் மிகுக் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது கொரானா வைரஸ் பாதிப்பு சீனாவில் வலுவடைந்து வரும் சூழலில், அதன் தாக்கம், உலக நாடுகள் அனைத்திலும் கடுமையாகவே எதிரொலிக்கும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.