அமெரிக்காவில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் மரணங்கள்..! இது வரை உயிரிழந்தவர்களின் விபரம் இதோ…!!
உலகையே ஆட்டம் காட்டும் கொடிய கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா கோர தாண்டவம் தற்போது உலகம் முழுவதும் 116 நாடுகளில், 5000க்கும் மேற்பட்டவர்களை சாதாரமாக பலி எடுத்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றை தொடர்ந்து, அந்நாட்டில் சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் இது வரை 50 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இரவு கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவில் இருந்து தான் கொரோனா வைரஸ் வந்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். அதில் யாரையும் குறை கூற விரும்பவில்லை என்ற அவர், கொரோனா உயிரிழப்பை குறைக்க அமெரிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக டோனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்க அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தின் படி, கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் டோனால்ட் டிரம்ப் கூறினார். மேலும், தான் ஏற்கெனவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதற்கான முடிவு இன்னும் வரவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப் கூறினார்.