நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக விசாரணை…!!!
இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.எஸ்.திசேராவை மிரட்டியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரருக்கு எதிராக இன்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் குருநாகல் வாத்தியார் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியிடமும் பௌத்த பெண்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட குற்றம் தொடர்பாக அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த நிலையில் குறித்த விவகாரத்தை விசாரிக்கும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் பீ.எஸ்.திசேராவை மிரட்டியமை தொடர்பிலேயே தேரருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டின் 4ஆம் இலக்க குற்றம் ஒன்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் 4 (அ) அத்தியாயத்தின் கீழ் இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக சி.ஐ.டி.யினர் குருணாகல் நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மேலதிக செயற்பாடுகளை இடம்பெறுவது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கூறப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.