குண்டுகளுடன் கொழும்பில் சுற்றியதாக கூறப்பட்ட தற்கொலைதாரியின் லொறி பொலீஸார் வசம்..!
இலங்கையில் கடந்த 21ம் திகதி கடந்த தற்கொலை தாக்குதலை தொடர்ந்து இன்னும் பதற்றம் குறையாத நிலையில் நாடு இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் லொறி மற்றும் பைக் போன்றவை வெடி பொருட்களுடன் சுற்றி திரிவதாக பொலீஸார் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக மக்களும் அவதானமாக இருந்தனர். இந்த நிலையில் வெல்லம்பிட்டி நவகம்புர பகுதியில் கைது செய்யப் பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் கொடுத்த தகவலின் படி..
லொறி ஒன்றை பொலீஸார் கைப் பற்றியுள்ளனர். இது பற்றிய அறிக்கையை பொலீஸார் வெளியிட்டுள்ளனர். வத்தளை நாயகந்த பகுதில் யாருமற்ற நிலையில் குறித்த லொறி நின்றுள்ளது. WP DAE 4197 என்ற இலக்கத்தை கொண்ட குறித்த லொறி ஷங்ரீலா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்தியவரின் பெயரில் ரெஜிஸ்டர் ஆகி இருப்பது தெரியவந்துள்ளது. !
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”