“கணவருக்கு துரோகம் செய்து என்னோடு வந்த நீ எப்படி பட்டவளாக இருப்பாய்” போதை தலைகேறி இளைஞர் செய்த செயல்..!!
தகாத உறவால் பெண் ஒருவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் தமிழ் நாட்டில்.இடம்பெற்றுள்ளது. கடலூர் முருகன் குடியில் வசித்து வந்த வீராசாமி என்பவர் அதே இடத்தை சேர்ந்த மோகனா என்ற பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்துள்ளார். மூன்று வருடங்களாக கணவருக்கு தெரியாமல் வீராசாமியுடன் மோகனா தகாத உறவில் இருந்துள்ளர்.
!Advert!
நேற்றைக்கு முன் தினம் மோகனா மற்றும் வீராசாமி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெரியமேடு பகுதியில் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கஞ்சா பயன்படுத்தும் வீராசாமி அதனை பயன்படுத்திவிட்டு மோகனாவுடன் தகாத முறையில் இருந்துள்ளார்.இதனால் மோகனா மறுப்பு தெரிவித்ததால் வெளியே சென்று மது அருந்திவிட்டு வந்து சண்டையிட்டுள்ளார்.
இதன் போது உன்னை நம்பி இருந்த கணவருக்கு துரோகம் செய்து மூன்று வருடங்கள் என்னோடு இருந்தாய் இனி எனக்கு துரோகம் செய்துவிட்டு யாரோடு செல்ல போகிறாய் என சண்டை போட்டுள்ளார். சத்தம் கேட்டு ஊழியர்கள் கேட்ட போது குடும்ப சண்டை என கூறியுள்ளார்.
!Advert!
பின் சண்டை அதிகரித்துள்ளது இதனால் கடுப்பான வீராசாமி தனது வேட்டியால் மோகனாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு மின்விசிரியில் தொங்கவிட்டுள்ளார். பின் ஹோட்டலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். திடீரென சத்தம் நின்றதால் சந்தேகத்தின் பேரில் கதவை தட்டிய ஹோட்டல் ஊழியர்கள் மின்விசிரியில் மோகனா தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்துள்ளனர்.
பொலீஸாருக்கு தகவல் கொடுக்கப் பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதுடன் வீராச்சாமியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்..!
!Advert!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.